குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை சாதி பெயர் சொல்லி அடித்ததாக கூறி அரசு ஆரம்ப பள்ளி முற்றுகை

சரவணம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டியதாக கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-19 20:14 GMT
சரவணம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டியதாக கூறி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்,  பள்ளியில் பயிலும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை சாதி பெயர் சொல்லி அடித்ததாக கூறி அவர்களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்