காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது வழக்குப் பதிவு

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2019-06-19 20:09 GMT
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது..வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கடந்த மே 20 ஆம் தேதி காவல்துறையில் புகழேந்தி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, புகாருக்குள்ளான மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை நீதிபதிகள்முடித்துவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்