"குடிநீர் புகார் - அலட்சியம் செய்தால் நடவடிக்கை" : அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது, அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-06-18 04:01 GMT
குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது, அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில்,  குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் ஹர்மேந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வாரிய இயக்குநர் மகேஸ்வரன், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குநர் ஹரிஹரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்