அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின்
தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளில் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளில், மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஸ்டாலின், குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கி உள்ளதாக கருத்து பதிவிட்டுள்ளார்.