"மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை" - இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக உதைத்த கணவர்

நாகர்கோவில் அருகே மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை கணவர் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தார்.

Update: 2019-06-08 02:45 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈசன்தங்கு பகுதியை சேர்ந்தவர் ராம்பிரபு. அவர் நாகர்கோவிலில் பெண் ஒருவர் வைத்துள்ள துணிக்கடைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாகவும் கடையின் பெயர் பலகையில் இருந்த அப்பெண்ணின் செல்போன் எண்ணை குறித்து கொண்டு போய் ராம்பிரபு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தனது கணவர் சுப்பிரமணியத்திடம் கூறியுள்ளார். அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேறொரு பெண் மூலம் செல்போனில் நைசாக பேசி ராம்பிரபுவை சுப்பிரமணியன் துணிக் கடைக்கு வரவழைத்து உள்ளார். செல்போன் விவகாரம் குறித்து சுப்ரமணியன் கேட்டபோது அவரை ராம்பிரபு தாக்கியுள்ளார். இதையடுத்து நண்பர்கள் உதவியுடன் ராம்பிரபுவை சுப்பிரமணியன் சரமாரியாக தாக்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்