சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை : லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி- ரூ.1 லட்சத்து 2,540 பறிமுதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2019-05-31 04:33 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையின்போது, வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. விசாரணையின் முடிவில் கணக்கில் வராத ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 540 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அலுவலக ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையறிந்த அப்பகுதியினர் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்