ஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு

வரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-24 11:27 GMT
இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்ய எதிர்த்து ஆசிரியர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைநிலை ஆசிரியர்களை நியமித்து அரசு உத்தரவு செல்லும் என்று தீர்பளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381அங்கன்வாடி மையங்களில் ஜூன் 3 ஆம் தேதி  எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினமே இடைநிலை ஆசிரியர்களையும் பள்ளிகளில் சேர அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்