ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அழகு என்ற மூதாட்டி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-22 13:28 GMT
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அழகு என்ற மூதாட்டி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையை சேர்ந்த அழகு மற்றும் அவரது உறவினர்கள், கோவையை சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு கோடி வரை டெபாசிட் செய்துள்ளனர். 100 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறியதாகவும், ஆனால் இதுவரை பணம் தராமல் இருப்பதாகவும் புகார் தெரிவித்த அழகு, இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஆட்சியர் அலுவலக முன்பு தற்கொலைக்கு முயன்ற அழகை, போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்