செல்போன் திருடனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு : ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை

பழனியில் திருட்டு வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த இளைஞர், சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-17 09:57 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்ரா தெருவை சேர்ந்த 20 வயதான இருளப்பன், செல்போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்குகளில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீனில் வெளிவந்ததுடன், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். வழக்கம் போல் இன்று பழனி நகர காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார். திடீரென அவரை வழிமறித்த கும்பல், இருளப்பனின் கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சம்பவம் அறிந்து வந்த போலீசார், ரத்தம் சொட்ட சொட்ட வெட்டுக் காயங்களுடன் துடித்த இருளப்பனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், மர்மநபர்கள் யார் என தெரியாமல் இருந்த நிலையில், இருவர் சரணடைந்துள்ளனர். நகர காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பொதுமக்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களா, சிறையில் இருக்கையில் ஏற்பட்ட தகராறா என்பது குறித்த எந்த விவரமும் 
தெரியவில்லை. 
Tags:    

மேலும் செய்திகள்