குடிநீர் வழங்க கோரி தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்...

தாராபுரம் அடுத்த மரவாபாளைம் கிராமத்திற்கு குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் தாராபுரம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-14 11:11 GMT
தாராபுரம் அடுத்த மரவாபாளைம் கிராமத்திற்கு குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் தாராபுரம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள பெரும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், குறைந்த அளவு வரும் குடிநீரும் உப்பு தண்ணீர் கலந்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று 50க்கும் மேற்பட்டோர், சுத்தமான குடிநீர், உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கூறி தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்