சுடுகாட்டில் பழுதடைந்த புகை போக்கி - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

சேலம் மரவனேரி பகுதியில் இயங்கி வரும் சுடுகாட்டில் பழுதடைந்த புகை போக்கி சரி செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-11 11:36 GMT
சேலம் மரவனேரி பகுதியில் இயங்கி வரும்  சுடுகாட்டில் பழுதடைந்த புகை போக்கி சரி செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்  சுடுகாட்டுக்கு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுடுகாட்டில் உள்ள புகை போக்கியின் பல பகுதிகள் சேதமடைந்து 3 ஆண்டுகளாக புகை வெளியேறி வருவதாகவும்,  சுற்று வட்டார பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி  பழுதடைந்த புகைபோக்கி சரிசெய்யப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்
Tags:    

மேலும் செய்திகள்