பேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு

சிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்

Update: 2019-04-19 22:23 GMT
சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென அங்கே வில்வ மரத்தடியில்  சிவலிங்கம் தோன்றியது.இதனால் பரவசமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த சிலைக்கு பூஜை செய்து வழிப்பட்டனர்,இந்நிலையில் சிலையை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர்.இந்த தகவலை அறிந்த கிராமமக்கள் சிலையை  அகற்ற கூடாது என கூறி விடிய விடிய காவல் காத்தனர்.இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, போலீசார் நடத்திய விசாரணையில்,சிலையை இரவோடு இரவாக செய்து கோயிலுக்கு பெயர் பலகையையும் மர்ம நபர்கள் வைத்து விட்டு சென்றது தெரியவந்தது..
Tags:    

மேலும் செய்திகள்