திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே..ஜனநாயக கடமையை ஆற்றிய தம்பதி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் மணக்கோலத்தில் வந்த தம்பதிகள். தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

Update: 2019-04-18 12:00 GMT
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் மணக்கோலத்தில் வந்த தம்பதிகள். தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். வீராணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு, விக்னேஸ்வரனுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே மணமக்கள் இருவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். 

ஜனநாயக கடமையாற்றிய புதுமணத் தம்பதி



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பைநாயக்கர் பட்டியை சேர்ந்த சுபாஷ் மற்றும் பிரியா காதலித்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அப்பைநாயக்கர்பட்டி பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்