தேர்தலை புறக்கணிக்க மலைகிராம மக்கள் முடிவு

சத்தியமங்கலம் அருகே சாலை வசதி செய்து தராததால் ஓட்டு போடப் போவதில்லை என மலைக்கிராம மக்கள் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்படுகிறது.

Update: 2019-04-15 04:39 GMT
கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் மல்லியம்மன் துர்கம் கிராமம் உள்ளது. அங்கு 120 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில் அவர்களுக்கு இதுவரை  சாலை வசதி அமைக்க வனத்துறை அனுமதி வழங்க மறுத்து வருகிறது.  பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மனு அளித்தும் அரசு எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்  தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக  குறிப்பிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்