"ராகுலின் அறிவிப்பு தமிழகத்தை பாலைவனமாக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி சார்பில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்யிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-04-13 07:43 GMT
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி சார்பில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்யிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும், காவிரி நதிநீர் ஆணையம் கலைக்கப்படும் என்று ராகுல் காந்தி 3 நாட்களுக்கு முன்பு பேசியதை சுட்டிக்காட்டினார். அவ்வாறு நடக்கும் நிலையில் தமிழகம் பாலைவனமாகும் என்றும், அதற்காகவா, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 
Tags:    

மேலும் செய்திகள்