பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ. 3.80 கோடி : ஏடிஎம்-க்கு கொண்டு செல்கையில் பறிமுதல்
கோவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர், காரணம்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர், காரணம்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் வாகனத்தை சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் இருந்தது. கோவையில் இருந்து பல்லடத்தில் உள்ள இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம்மிற்கு பணத்தை கொண்டு செல்வதாக கூறினாலும், உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.