வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்

கொலையா ? தற்கொலையா ? - போலீசார் தீவிர விசாரணை

Update: 2019-03-14 21:18 GMT
இரணியல் அருகே உள்ள ஆளூர் குளத்தில் இருபது வயது மதிக்கதக்க இளைஞரின் சடலம்  கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர், முன்னாள் அ.தி.மு.க பேரூர் செயலாளர் சுரேந்திரன் என்பவரது மகன் நவீன் என்பது தெரிய வந்துள்ளது. நவீன் நேற்று நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், நவீனை கொலை செய்து குளத்தில் வீசியிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக நவீனின் நண்பர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்