நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு ஒரு வாரம் சிறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு ஒரு வார சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2019-03-11 12:12 GMT
மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளர்களுக்கு 4 வாரங்களில் பதவி உயர்வு வழங்க கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அமல்படுத்தாத தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையர் அனீஸ் சேகர் ஆகியோருக்கு எதிராக விஜயகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன், மதுரை மாநகராட்சியின் அப்போதைய ஆணையருக்கு ஒரு வார சிறையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்