ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2019-03-09 21:29 GMT
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி, தனக்கு ஜாமின் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில்  பலமுறை மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள்  தள்ளுபடி செய்யப்பட்டது.  உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்க கோரி மதுரை கிளையில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்