தேர்வுக்கு படிக்குமாறு மகனை திட்டிய தந்தை - மனமுடைந்து கிணற்றில் விழுந்து மகன் தற்கொலை

பழனி அருகே சின்னாரகவுன்டன் வலசு பகுதியை சேர்ந்த பென்னி என்பவரின் மகன் சிரில்பென்னி, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்

Update: 2019-02-26 11:50 GMT
பழனி அருகே சின்னாரகவுன்டன் வலசு பகுதியை சேர்ந்த பென்னி என்பவரின் மகன் சிரில்பென்னி, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிரில்பென்னியிடம், தேர்வு நெருங்குவதால் படிக்குமாறு தந்தை பென்னி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிரில்பென்னி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளான். இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள தோடத்து கிணற்றில் இருந்து மாணவன் சிரில்பென்னியின் உடலை போலீசார் மீட்டனர்.தேர்வுக்கு  படிக்குமாறு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்