ஜெயலலிதா பிறந்த நாள் விழா : இன்று பிறந்த குழந்தைகளுக்கு செயின், மோதிரம் கொலுசு - கடம்பூர் ராஜு பரிசாக வழங்கினார்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார்.

Update: 2019-02-24 13:16 GMT
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார். நங்கவள்ளியை சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கு இன்று அதிகாலையில் பிறந்த பெண் குழந்தைக்கு ஒன்றே கால் பவுன் தங்க சங்கிலி அளித்தார். பின்னர், அடுத்தடுத்து பிறந்த 2 குழந்தைகளுக்கு மோதிரங்களையும் அதன்பிறகு பிறந்த 5 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசுகளையும் அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசளித்தார். இதையடுத்து, அண்ணா பூங்கா பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்