இரும்பு கம்பியால் தாக்கி திமுக பிரமுகர் படுகொலை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, திமுக பிரமுகர் ஒருவர், இரும்புக் கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-02-23 09:43 GMT
கென்டைய கவுண்டனூரை சேர்ந்த சவடமுத்து என்கிற மொராஜ் திமுக கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். சொந்தமாக வாடகை வாகனங்களை இயக்கி வந்த இவர், நேற்றிரவு தனது வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தூங்கியபோது,  மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காலையில் பணிக்கு வந்தவர்கள் பார்த்து  வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  போலீஸ் மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்