மாமியாரை திருமணம் செய்த மருமகன்... மாமனாருக்கு காத்திருந்த ஷாக்.. வைரலாகும் வீடியோ

Update: 2024-05-02 02:09 GMT

பீகாரில் திருமணமான நபர் தன் மாமியாரை 2வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் வசித்து வருகிறார் 45 வயது சிக்கந்தர் யாதவ்... இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்... மனைவி இறந்து விட்ட நிலையில், தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார் சிக்கந்தர்... இந்த சூழலில் தான் சிக்கந்தரும் 55 வயது மாமியார் கீதாவும் ரகசிய உறவை வளர்த்து வந்துள்ளனர்... கையும் களவுமான இருவரும் ஒருநாள் பிடிபடவே பஞ்சாயத்தைக் கூட்டினார் மாமனார் திலேஷ்வர் தர்வே... பஞ்சாயத்தில் சிக்கந்தர் உண்மையை ஒப்புக் கொண்ட நிலையில், அனைவர் முன்னிலையிலும் சிக்கந்தரும் கீதாவும் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்