மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்

தமிழகத்தில் மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2019-02-21 18:29 GMT
தமிழகத்தில் மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டேராபாறை அணை திட்டத்தினை விரைந்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று ஞானசேகரன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, உபரிநீரை விடும் வடிகால் போல  பிற மாநிலங்களால் தமிழகம் கையாளப்பட்டு வருவதாக கூறியுள்ளது.. தமிழத்தில் புதிதாக தடுப்பணை கட்டும் திட்டம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து பதில் அளிக்கக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 
Tags:    

மேலும் செய்திகள்