கொள்ளையன் சுட்டதில் டாஸ்மாக் ஊழியர் காயம் - ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் மகரஜோதியை , சேலத்தில் அரசு பணியாளர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2019-02-18 11:06 GMT
தர்மபுரி மாவட்டம் அரூரில் இரு தினங்களுக்கு முன்பு கொள்ளையன் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் மகரஜோதியை , சேலத்தில் அரசு பணியாளர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிகிச்சை பெற்று வரும் மகரஜோதிக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். சென்னையில் நடைமுறையில் உள்ளதை போல, டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை மொபைல் வேன் மூலம் பெற்று செல்லும் முறையை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்