இரவில் நோட்டமிடும் திருடர்களுக்கு போலீஸ் வலை

பழனி பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

Update: 2019-02-17 08:08 GMT
பழனி பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து  கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.ஜி.நகரில் பூட்டிய வீடொன்றில் நுழைந்த மர்மநபர்கள் பல லட்சம் ரூபாய் பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். அண்மையில், பக்கத்து வீட்டில் 15 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளைபோனது. இந்நிலையில், வீடு ஒன்றின் சுவரை தாண்டும் நபர் , சாவகாசமாக வீட்டை நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்