வாகன ஓட்டிகளை எச்சரித்த கிரண்பேடி

சாலையில் இறங்கி திடீர் சோதனை மேற்கொண்டார் கிரண்பேடி

Update: 2019-02-10 20:01 GMT
புதுச்சேரியில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சாலைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, தலைக்கவசம் அணியாதவர்களின் இரசக்கர வாகனங்களை மறித்த கிரண்பேடி, தலைக்கவசம் அணியுமாறு வலியுறுத்தினார். இதேபோல, இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணித்த‌தையும், ஆட்டோவில் அதிக நபர்கள் பயணித்த‌தையும் கிரண்பேடி கண்டித்தார். மாநில ஆளுநர் வீதியில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்களை வியப்பில் ஆழ்த்தியது. 
Tags:    

மேலும் செய்திகள்