சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா : கத்திப்போடும் நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்கள்
சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்திபோடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டையில் உள்ள பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்திபோடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இளைஞர்கள் நெஞ்சிலும், கைகளிலும், கத்திப் போட்டு கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர். இதேபோல் இரவில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீதி உலா வரும் போது இளைஞர்கள் ஆடல் பாடலுடன் கத்திபோடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.