மாற்று திறனாளிகளுக்கான பயிற்சியாளர் சங்கத்தினர் டி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாற்று திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர் சங்கத்தினை சார்ந்த 450 ஆசிரியர்கள் சென்னை DPI வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

Update: 2019-01-24 02:21 GMT
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாற்று திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர் சங்கத்தினை சார்ந்த 450 ஆசிரியர்கள் சென்னை DPI வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். 20 ஆண்டுகள் கடந்தும் தற்காலிக ஆசிரியர்களாகவே இன்று வரை பணிபுரிவதால், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல சம்பளம் வழங்கபடுவதில்லை என்று வேதனை 
தெரிவிக்கின்றனர். தங்களுக்கு பணி நியமன ஆணையை அரசு வழங்கும் வரைக்கும் DPI வளாகத்திற்குள் போராட்டத்தை தொடர போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்