மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

நாகை மாவட்டம், பொய்கை நல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-15 19:31 GMT
நாகை மாவட்டம், பொய்கை நல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்ணன் என்பவரது வீட்டில், மின்சார ஊழியர்கள் மின்னிணைப்பு வழங்கும்
பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது மின் கம்பியை பிடித்த, சரவணன் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து, மின் ஊழியர், காத்தலிங்கம் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி, பொய்கைநல்லூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்த, போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததும், போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக, நாகை நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்