ஸ்ரீவில்லிபுத்தூர் : கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்த 2 வயதான புள்ளி மானை, தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

Update: 2019-01-13 09:02 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்த 2 வயதான புள்ளி மானை, தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். கூமாப்பட்டி பூரிபாறைகுளம் இடத்தில் உள்ள வயல்வெளி கிணற்றில் புள்ளி மான் மிதப்பதை கண்ட தோப்பின் உரிமையாளர், தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மானை கிணற்றிலிருந்து கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்