"நாயை ஏன் கல்லால் துரத்தினாய்?..."விரிவுரையாளரை விரட்டி விரட்டி வெளுத்த குடும்பத்தினர்.. அதிர்ச்சி காட்சிகள்....

Update: 2024-04-28 11:33 GMT

கடிக்க வந்த நாயைத் துரத்திய விரிவுரையாளரை, நாயைத் துரத்தியதற்காக விரட்டி விரட்டி அடித்த நபர்களைக் கைது செய்யக்கோரி விரிவுரையாளரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது...

நாமக்கல் நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி விரிவுரையாளர் ராஜ்குமார் கடந்த 24ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து சைக்கிளில் சென்றுள்ளார்... அப்போது அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரின்

வளர்ப்பு நாய் ராஜ்குமாரை கடிக்க துரத்தியுள்ளது. ராஜ்குமார் தன்னைத் தற்காத்துக் கொள்ள நாயை கல்லைக் கொண்டு எரிந்துள்ளார்... இதைக் கண்டு ஆத்திரமடைந்த யோகேஷ், நாயைக் கல்லைக் கொண்டு எரிந்ததற்காக ராஜ்குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்... தொடர்ந்து ராஜ்குமாரைக் கடுமையாக தாக்கினார்... யோகேஷுடன் இணைந்து அவரது தந்தை சிவபாலன், சகோதரர் கோகுலேஷ் ஆகியோரும் ராஜ்குமாரை சரமாரியாகத் தாக்கினர்... தன் மகனைக் காக்க தடுக்க வந்த ராஜ்குமாரின் தந்தை துரை ராஜையும் அவர்கள் சேர்த்துத் தாக்கியுள்ளனர். காயமடைந்த ராஜ்குமாரும் துரை ராஜும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்... சம்பவம் பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்