அறநிலையத்துறை- பால்வளத்துறை இடையே மோதல்

பால்வளத்துறை மீது அறநிலையத்துறை புகார்

Update: 2019-01-06 14:18 GMT
புதுக்கோட்டை திலகர் திடலில் ஆவின் நிறுவனம் சார்பில் ஆவின் பால் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. அந்த இடம் அறநிலைய துறைக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை மாவட்ட பால்வளதுறை தலைவர் பழனியாண்டி திறந்து வைத்தார். இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை மூடக்கோரி  அறநிலையத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்