சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக புகார் - 4 திருநங்கைகளை கைது செய்த போலீசார்

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-16 01:41 GMT
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் என்பவர், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவரை வழிமறித்த 4 திருநங்கைகள் பணம் கேட்டதோடு அவரின் பர்சை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், 4 திருநங்கைகளை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்