பிறந்த குழந்தை திடீர் மாயம்...வீட்டிற்கு பின்னால் புதைகுழி - ஊரையே நடுங்க விட்ட கொடூரம்

Update: 2024-05-02 10:07 GMT

பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை, குடும்பமே சேர்ந்து புதைத்துக் கொன்ற கொடூர சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது.

மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் காதலித்து ஏமாற்றியதாக அதே பகுதியை சேர்ந்த அன்புதுரை என்பவரை, புகாரின் பேரில் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, பிறந்த குழந்தை தன்னுடையது தானா என்பதை, டிஎன்ஏ பரிசோதனை மூலம் நிரூபிக்க வேண்டும் என அன்புதுரை சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி, திங்கட்கிழமை அன்று டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தை திடீரென வீட்டிலிருந்து மாயமானதாக, அதன் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகே பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதுதொடர்பாக குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை மேற்காண்டபோது, குழந்தையை கொன்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனைக்கு பயந்துதான், குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்