தினகரன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி : விசாரணைக்கு ஒத்துழைக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தினகரன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி : விசாரணைக்கு ஒத்துழைக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Update: 2018-12-14 20:38 GMT
வருமான வரித்துறை நடவடிக்கைகளை எதிர்த்து தினகரன் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் நீதிபதி சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி தினகரனுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த நடவடிக்கைகள் தொடர்பாக தினகரன், தனது தரப்பு கருத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என வருமான வரித்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்