பேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Update: 2018-12-14 00:48 GMT
பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை திரும்ப வழங்க 3 லட்சம் ரூபாய் கேட்டதால் உதவி பேராசிரியர் வசந்தவாணன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனியார் கல்லூரிகள் ஊழியர்கள் சங்க நிறுவனர் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கல்லூரியில் வேலைக்கு சேருபவர்களின் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்  இது தொடர்பாக அண்ணா பல்கலைகழகம்,  தமிழக அரசு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் ஆகியவை  4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்