மாநில அளவிலான ஆணழகன் போட்டி -திருப்பூரை சேர்ந்த பிரதீப் முதல் இடம்

உடுமலையில் நடந்த மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் திருப்பூரை சேர்ந்த பிரதீப் முதல் இடத்தையும் சென்னையை சார்ந்த சந்தோஷ் இரண்டாம் இடத்தையும் தட்டிச்சென்றனர்.

Update: 2018-12-10 02:09 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதல் முறையாக  மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. கோவை,சென்னை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். ஏழு எடை பிரிவுகளில் ஐந்து சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டிகளின் முடிவில் தமிழக ஆணழகன் பட்டத்தை திருப்பூரை சேர்ந்த பிரதீப்பும், இரண்டாவது இடத்தை சென்னையை சார்ந்த சந்தோசும் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, ரொக்கப் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கி கவுரவிக்கபட்டனர். அரசுக்கு போட்டியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை புகையிலை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரங்களில் நடிக்கவும் பிரச்சாரம் செய்வதற்கும் தங்களை போன்ற கட்டுடல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வெற்றி பெற்றவர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்