புயல் நிவாரணம் : மார்க்சிஸ்ட் ரூ.10 லட்சம் நிதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியை, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.

Update: 2018-12-03 09:27 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியை, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வழங்கினார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த அவர், கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட புயல் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து குறைவான நிதி வழங்குவதாகத் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்