பாம்பன் பாலத்தை கடந்துச் சென்ற மிதவைக் கப்பல்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை கடந்து சென்ற மிகப்பெரிய மிதவைக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Update: 2018-10-24 05:41 GMT
சென்னை காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து 200 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட மிதவைக் கப்பல் மும்பை செல்வதற்காக பாம்பன் துறைமுகத்திற்கு வந்தது. துறைமுக அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன், பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக மும்பைக்கு சென்றது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்