இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை கப்பல் அத்துமீறல் - கைது அச்சத்தில் கரை திரும்பிய மீனவர்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள், நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

Update: 2018-10-16 06:18 GMT
ராமேஸ்வரத்தில் இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை கப்பல் அத்துமீறி நுழைந்ததால், தங்களை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மீன் பிடிக்காமல் திரும்பியதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள், நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து சில  மைல் 
தொலைவில் இலங்கைக் கடற்படையின் கப்பல் அத்துமீறி நுழைந்திருப்பதை கண்ட மீனவர்கள், அதனை தங்கள் செல்போனில் அதனை படம்பிடித்து மீனவ சங்கங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்