5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது..!

சென்னை சூளைமேட்டில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Update: 2018-09-21 11:02 GMT
சென்னை சூளைமேட்டில் உள்ள பெரியார் பாதை தெருவில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு 57 வயதுடைய முதியவர் குமார் பாலியல் தொந்தரவு கொடுத்தாக குழந்தையின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் தரைதளத்தில் விளையாடி கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை அதே அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் வசித்து வந்த குமார் மேல் தளத்திற்கு தூக்கி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவம் இடத்துக்கு சென்ற சூளைமேடு போலீசார் முதியவர் குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்