பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் : இளைஞர் நவீன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் நவீனை 3 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-18 13:33 GMT
பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் நவீன் என்ற இளைஞரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர். தாராபுரத்தை அடுத்த ரஞ்சிதாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன். இவரின் தந்தை கந்தசாமி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொறுப்பாளராக உள்ளார். பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் நவீனை 3 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நவீன் 10 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.  கடந்த ஆண்டு திமுக பேனர்கள் கிழிக்கப்பட்ட வழக்கில் நவீன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்