பிறந்து சில மணி நேரத்தில் இறந்த பச்சிளம் சிசு : மருத்துவரிடம் உறவினர்கள் வாக்குவாதம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்து விடவே அதற்கு காரணம் போதிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததே எனக் கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-16 07:01 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பார்கவி என்ற கர்ப்பிணிக்கு, திடீரென குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு சுவாசிக்கும் பிரச்சினை இருந்ததால் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அங்கு குழந்தை இறந்து விடவே, அதற்கு காரணம் போதிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததே எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருடன் பார்கவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்