குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுனர் : அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுனரால் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டன.

Update: 2018-09-02 08:28 GMT
ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, கோனேரிப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த கார், டெம்போ மற்றும் வேன் உள்ளிட்டவற்றின் மீது அடுத்தடுத்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது. சின்னாறு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி, சிறிது தூரத்திற்கு பின்னோக்கி சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், லாரியை நிறுத்தி உள்ளே பார்த்த போது, ஓட்டுனர் அதீத போதையால் மயங்கிக் கிடந்தார். இதையடுத்து, அவரை வெளியே இறக்கிய மக்கள், ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்