மார்ச் 11-ல் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 11 ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 11 ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 14 வது ஐ.பி.எல் சீசனுக்கான போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐ.பி.எல் போட்டி நடத்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மார்ச் 11 ஆம் தேதி பயிற்சியை தொடங்கவிருப்பதாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.