காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து மார்ஷ் விலகல்?

காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் வீரர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2020-09-23 02:51 GMT
பெங்களூர் அணிக்கு எதிரான மோதலில்  5 வது ஓவரை வீசிய போது மிட்செல் மார்ஷூக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் துடிதுடிக்க களத்தில் இருந்து வெளியேறினார். பரிசோதனையில் அவர் காயம் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மார்ஷ், தொடரில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக டேனியஸ் கிறிஸ்டியனை ஹைதராபாத் நிர்வாகம் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்