மகளிர் உலகக் கோப்பை டி-20 தொடர் - இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

மகளிருக்கான உலகக் கோப்பை இருபது ஓவர் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

Update: 2020-03-05 09:24 GMT
மகளிருக்கான உலகக் கோப்பை இருபது ஓவர் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சிட்னியில் நடைபெறவிருந்த முதல்அரையிறுதியில், இந்தியாவும், இங்கிலாந்தும் களமிறங்க இருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்