கால்களை இழந்தும் கால்பந்தில் கலக்கும் வீரர்
கேரள வீரருக்கு கவுகாத்தி அணி பாராட்டு
கேரளாவில் கால்களை இழந்த கால்பந்து வீரர் ஒருவர் தன்னம்பிக்கையை இழக்காமல் ஊன்றுகோல் உதவியுடன் கால்பந்து விளையாடி வருகிறார். வைசாக் என்ற அந்த இளைஞர் விபத்தில் தன் காலை இழந்தார். எனினும் கடின முயற்சியால் தற்போது உள்ளூர் போட்டியில் மற்ற வீரர்களுடன் ஊன்று கோல் உதவியுடன் கால்பந்து விளையாடுகிறார். இந்த வீடியோவை பார்த்த NORTH EAST UNITED அணி, இளைஞர் வைசாக்கிற்கு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.