கோவை : 21-வது தேசிய கார் பந்தயம், இந்திய அளவில் முன்னணி வீரர்கள் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற 21-வது தேசிய அளவிலான கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Update: 2018-09-03 06:03 GMT
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட் வேயில், 21-வது தேசிய அளவிலான  கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்களின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்றது.

 இந்த போட்டிகளில் சென்னை, கோவை, டெல்லி, மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வீர்ர்கள் பங்கேற்றனர். முதலாவதாக நடைபெற்ற நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் முதலாவது இடத்தை கொச்சின் வீரர் அஸ்வின் நாயர் வென்றார். 

எல்.ஜி.பி.பார்முலா Four கார் பந்தயத்தின் முதல் போட்டியில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத்தும் இரண்டாவது போட்டியில் சென்னை வீரர் ராகுல் ரங்கசாமியும் வென்றனர். யூரோ ஜே.கே. Eighteen முதல் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் தத்தா முதல் இடத்தை பிடித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்